Tuesday, November 29, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்-முழங்கால் மூட்டில் ஒலி

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

முழங்கால் மூட்டில் வ... என்ன செய்ய வேண்டும்?
எனக்கு 42 வயதாகிறது. ஐந்து மாதங்களாக முழங்கால் மூட்டு வலியுள்ளது. உட்கார்ந்து எழுந்தால் "பட் பட் பட்' என்று முழங்கால் மூட்டில் இருந்து ஒலி வருகிறது. வலது கால் முழங்கால் மூட்டில்தான் அதிக வலி. அதுபோல வலது தோள் பட்டையிலும், வலது குதிகாலிலும் வலி உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் தீர்வு கிடைக்குமா?
ஒரு வாசகி, கமலாபுரம்.
"சிலேஷக சிலேஷ்மா' என்று ஒரு பசை வஸ்து இருக்கிறது. மனித உடலிலுள்ள சிறிய, பெரிய சகல மூட்டுகளுக்கிடையே கட்டுத் தளராமல் வழவழப்பையுண்டு பண்ணிக் கொண்டு இருக்கிற இந்தப் பசை வஸ்து உங்களுக்கு வறண்டு போய்விட்டதோ? என்று தோன்றுகிறது. இந்த சிலேஷக சிலேஷ்மாவுக்கு ஏற்படும் கோளாறினால் கீல் பிடிப்பு, முடக்கு வலி முதலிய உபாதைகள் ஏற்படும். இரண்டு எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள இந்தப் பசையினால், உராய்வு ஏதும் ஏற்படாமல் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. குணங்களின் வாயிலாக செயல்களை நிகழ்த்தும் இந்த சிலேஷ்மா, வறண்டுவிடாமலிருக்க, அதன் நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், மழமழப்பு, கொழ கொழப்பு, நிலையான தன்மை போன்ற குணங்களை நீங்கள் உணவின் மூலமாகவும், செயல்களின் வாயிலாகவும், மருந்துகளின் மூலமாகவும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உணவைப் பற்றி ஆராய்ந்து தெளிவுறுதல் நலமாகும். நிலம், நீர் ஆகியவற்றை ஆதிக்ய பூதங்களாக்கிய சிலேஷ்மா எனும் கபதோஷத்தைப் பெற இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகள் உதவிடக்கூடும். ஏனென்றால் இனிப்புச் சுவையானது, நிலம் மற்றும் நீரினால் உருவாகிறது. ஆனால் இந்த இரு மகா பூதங்களை, குடலிலிருந்து முட்டியின் ஜவ்வு வரை எடுத்துச் செல்வது எளிதல்ல. அதற்குக் காரணம், அவை இரண்டும் கனமான வஸ்துக்களாக இருப்பதுதான். அவற்றைக் கொண்டு செல்ல புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை நீங்கள் மிதமாக உணவில் சேர்க்க வேண்டும். நெருப்பில் எளிதாக வேகக் கூடிய நிலம் மற்றும் நீரினால், எலும்புக்களுக்கிடையே அமைந்துள்ள சிலேஷக சிலேஷ்மா வளர்ந்து, முழங்கால் மூட்டில் ஏற்படும் "பட் பட்' என்ற சப்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. அரிசியை நன்றாகக் கழுவி, கஞ்சியை வடித்து, நன்கு பக்குவப்படுத்தி, அதிலுள்ள ஆவிப் புகை அடங்கிய பின், சூடான சாதத்துடன் பால், புலால் ஆகியவை கலந்து காலை உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவுக்கு முன் வாழைப்பழம் சாப்பிட உகந்தது. மாலையில் அத்திப் பழமும், இரவில் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும்.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், தரையில் அமர்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்ற செயல்களைத் தவிர்க்கவும். சமையல் செய்வதானால் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு செய்து, முழங்கால் மூட்டுகளுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் படுக்கையில் படுத்திருந்து, கால் மூட்டுகளுக்கு அதிக வேலைப் பளு தராமலிருப்பதால், உட்புற ஜவ்வு வலுப் பெற வழி ஏற்படும்.
"ஜடாமயாதி' என்று ஒரு சூரண மருந்து விற்பனையாகிறது. அரிசியை வேக வைத்து, வடித்தெடுத்த கஞ்சியுடன் இந்தச் சூரணத்தைக் குழைத்து, வெதுவெதுப்பாக முழங்கால் மூட்டுகளில் காலை, மாலை உணவுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் பற்று இட்டு வைத்தல் மூலம், சிலேஷக சிலேஷ்மா வளர்வதற்கும், வலியைப் போக்குவதற்கும் உதவும். சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை பற்றிடலாம். நன்றாகப் பசியெடுத்துச் சாப்பிடக் கூடியவராக நீங்களிருந்தால், க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில், சிறிது வெது
வெதுப்பான பாலுடன் சுமார் 3 - 6 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூட்டு வலி குறைவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.
உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச்சுவை, எண்ணெய்ப் பசையற்ற உணவு போன்றவற்றைத் தவிர்க்கவும்; அல்லது குறைக்கவும். சைக்கிள் சவாரி, பேருந்தில் நின்று கொண்டு பயணித்தல், கால் மேல் கால் போட்டு அமருதல், அடிக்கடி கால்களை ஆட்டிக் கொண்டிருத்தல் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
கால் மூட்டுகளிலும் தோள் பட்டையிலும் கணுக்கால்களிலும் மூலிகைத் தைலங்களைப் பூசுதல், மூலிகை இலைகளால் வேக வைக்கப்பட்ட நீரிலிருந்து வெளியாகும் நீராவியை, வலி உள்ள பகுதிகளில் காண்பித்து வியர்வையை வரவழைத்தல், வலி உள்ள பகுதிகளில் எண்ணெய் கட்டுதல் போன்ற சிறந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனைகளில் நீங்கள் செய்து கொள்வது நலமே



--
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com

Monday, November 14, 2011

முழங்கால் மூட்டில் வலி - ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

முழங்கால் மூட்டில் வ... என்ன செய்ய வேண்டும்?
எனக்கு 42 வயதாகிறது. ஐந்து மாதங்களாக முழங்கால் மூட்டு வலியுள்ளது. உட்கார்ந்து எழுந்தால் "பட் பட் பட்' என்று முழங்கால் மூட்டில் இருந்து ஒலி வருகிறது. வலது கால் முழங்கால் மூட்டில்தான் அதிக வலி. அதுபோல வலது தோள் பட்டையிலும், வலது குதிகாலிலும் வலி உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் தீர்வு கிடைக்குமா?
ஒரு வாசகி, கமலாபுரம்.
"சிலேஷக சிலேஷ்மா' என்று ஒரு பசை வஸ்து இருக்கிறது. மனித உடலிலுள்ள சிறிய, பெரிய சகல மூட்டுகளுக்கிடையே கட்டுத் தளராமல் வழவழப்பையுண்டு பண்ணிக் கொண்டு இருக்கிற இந்தப் பசை வஸ்து உங்களுக்கு வறண்டு போய்விட்டதோ? என்று தோன்றுகிறது. இந்த சிலேஷக சிலேஷ்மாவுக்கு ஏற்படும் கோளாறினால் கீல் பிடிப்பு, முடக்கு வலி முதலிய உபாதைகள் ஏற்படும். இரண்டு எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள இந்தப் பசையினால், உராய்வு ஏதும் ஏற்படாமல் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. குணங்களின் வாயிலாக செயல்களை நிகழ்த்தும் இந்த சிலேஷ்மா, வறண்டுவிடாமலிருக்க, அதன் நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், மழமழப்பு, கொழ கொழப்பு, நிலையான தன்மை போன்ற குணங்களை நீங்கள் உணவின் மூலமாகவும், செயல்களின் வாயிலாகவும், மருந்துகளின் மூலமாகவும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உணவைப் பற்றி ஆராய்ந்து தெளிவுறுதல் நலமாகும். நிலம், நீர் ஆகியவற்றை ஆதிக்ய பூதங்களாக்கிய சிலேஷ்மா எனும் கபதோஷத்தைப் பெற இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகள் உதவிடக்கூடும். ஏனென்றால் இனிப்புச் சுவையானது, நிலம் மற்றும் நீரினால் உருவாகிறது. ஆனால் இந்த இரு மகா பூதங்களை, குடலிலிருந்து முட்டியின் ஜவ்வு வரை எடுத்துச் செல்வது எளிதல்ல. அதற்குக் காரணம், அவை இரண்டும் கனமான வஸ்துக்களாக இருப்பதுதான். அவற்றைக் கொண்டு செல்ல புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை நீங்கள் மிதமாக உணவில் சேர்க்க வேண்டும். நெருப்பில் எளிதாக வேகக் கூடிய நிலம் மற்றும் நீரினால், எலும்புக்களுக்கிடையே அமைந்துள்ள சிலேஷக சிலேஷ்மா வளர்ந்து, முழங்கால் மூட்டில் ஏற்படும் "பட் பட்' என்ற சப்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. அரிசியை நன்றாகக் கழுவி, கஞ்சியை வடித்து, நன்கு பக்குவப்படுத்தி, அதிலுள்ள ஆவிப் புகை அடங்கிய பின், சூடான சாதத்துடன் பால், புலால் ஆகியவை கலந்து காலை உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவுக்கு முன் வாழைப்பழம் சாப்பிட உகந்தது. மாலையில் அத்திப் பழமும், இரவில் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும்.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், தரையில் அமர்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்ற செயல்களைத் தவிர்க்கவும். சமையல் செய்வதானால் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு செய்து, முழங்கால் மூட்டுகளுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் படுக்கையில் படுத்திருந்து, கால் மூட்டுகளுக்கு அதிக வேலைப் பளு தராமலிருப்பதால், உட்புற ஜவ்வு வலுப் பெற வழி ஏற்படும்.
"ஜடாமயாதி' என்று ஒரு சூரண மருந்து விற்பனையாகிறது. அரிசியை வேக வைத்து, வடித்தெடுத்த கஞ்சியுடன் இந்தச் சூரணத்தைக் குழைத்து, வெதுவெதுப்பாக முழங்கால் மூட்டுகளில் காலை, மாலை உணவுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் பற்று இட்டு வைத்தல் மூலம், சிலேஷக சிலேஷ்மா வளர்வதற்கும், வலியைப் போக்குவதற்கும் உதவும். சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை பற்றிடலாம். நன்றாகப் பசியெடுத்துச் சாப்பிடக் கூடியவராக நீங்களிருந்தால், க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில், சிறிது வெது
வெதுப்பான பாலுடன் சுமார் 3 - 6 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூட்டு வலி குறைவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.
உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச்சுவை, எண்ணெய்ப் பசையற்ற உணவு போன்றவற்றைத் தவிர்க்கவும்; அல்லது குறைக்கவும். சைக்கிள் சவாரி, பேருந்தில் நின்று கொண்டு பயணித்தல், கால் மேல் கால் போட்டு அமருதல், அடிக்கடி கால்களை ஆட்டிக் கொண்டிருத்தல் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
கால் மூட்டுகளிலும் தோள் பட்டையிலும் கணுக்கால்களிலும் மூலிகைத் தைலங்களைப் பூசுதல், மூலிகை இலைகளால் வேக வைக்கப்பட்ட நீரிலிருந்து வெளியாகும் நீராவியை, வலி உள்ள பகுதிகளில் காண்பித்து வியர்வையை வரவழைத்தல், வலி உள்ள பகுதிகளில் எண்ணெய் கட்டுதல் போன்ற சிறந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனைகளில் நீங்கள் செய்து கொள்வது நலமே

Friday, November 11, 2011

மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது 55. நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தச் செயலையும் "சடக்'கென்று செய்ய இயலாது. சிறிது நேரம் உடலை இங்குமங்கும் நகர்த்தி பிரயத்தனம் செய்தால் மட்டுமே எச்செயலையும் செய்ய முடியும். தசைப் பகுதிகள் இறுக்கமாக இருப்பதால், படி ஏறும்போது
முதல் நான்கு படிகள் சிரமப்பட்டு ஏற வேண்டும். அதன் பிறகுதான் எளிதாக ஏற முடிகிறது. இதேபோல், உடலில் உள்ள எல்லாத் தசைப் பிரிவுகளுமே சிறிதுநேர
முயற்சிக்குப் பின்பே செயல்பட முடிகிறது. இதற்கு
ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா? க.அழகுராஜன், விருதுநகர்.

மூளைப் பகுதியிலிருந்து இடப்படும் கட்டளைகளான "எழுந்திரு, நட, உட்கார், படு' போன்ற செய்தித் தொகுப்பினைத் தசைப் பகுதிகளில் அமைந்துள்ள நரம்புகள் ஏற்று, அதன்படி செயல்படுவதும், தோலில் ஏற்படும் தொடு உணர்ச்சியினை, அதனடியில் அமைந்திருக்கும் நரம்புகளின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்வதுமான ஓர் உணர்ச்சிகளின் போராட்டம் உயிருள்ள ஒரு மனித உடலில் எந்நேரமும் நடந்து கொண்டிருப்பது ஓர் இயல்பான நிகழ்ச்சியாகும்.
கண நேரத்தில் நடைபெறும் இச்செயல்களின் வேகமானது, உங்களுடைய விஷயத்தில் மந்தமான கதியில் நடைபெறுகிறது.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதால், இது தாய், தந்தையரின் "பீஜ தோஷத்தினால்' ஏற்பட்டுள்ளதோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது. "பீஜம்' என்றால் விதை என்று பொருள். நல்ல சத்தான ஒரு விதையை, பண்பட்ட ஒரு நிலத்தில் விதைத்தால், செழிப்பான ஒரு செடி வளருவதை நாம் காணலாம். அதுபோல, ஓர் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்குத் தாயின் சினைமுட்டையும், தந்தையின் விந்துவும், த்ரிதோஷங்களாகிய வாத - பித்த - கப தோஷங்களின் சமநிலையைப் பெற்றிருக்க வேண்டும். வாதம் என்னும் தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி, முறமுறப்பு, நுட்பம், அசையும் தன்மை போன்றவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு அதன் தாக்கமானது மூளையிலும் தசை நரம்புகளிலும் காணும். இருந்தாலும் பெற்றோரை மட்டுமே குறை கூறுவதும் தவறாகும். நீங்கள் வளர்ந்த சூழ்நிலை, இடம், உணவுமுறைகள், செய்யும் தொழில் போன்றவையும் காரணமாகலாம்.
மூளை மற்றும் தசைப் பகுதிகளைச் சார்ந்த நரம்புகளில் அமைந்துள்ள வாயுவின் செயல்திறனைச் சீராக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. மூளை நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய க்ஷீரபலா தைலம், கார்ப்பாஸôஸ்த்யாதி தைலம், பலா குடூச்யாதி தைலம், மதுயஷ்ட்யாதி தைலம், தசை நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு, தான் வந்திரம் தைலம் போன்றவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகித்து நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, வாத தோஷத்தை சீராக்கும் திறன் உடையவை என்பதால் இந்தச் சுவைகளை மிதமாக உணவில் சேர்க்கவும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, வாதத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையவை என்பதால், இச்சுவை நிறைந்த உணவு வகைகளைக் குறைக்கவும். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும், புளிப்புச் சுவையுள்ள மோர், எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெதுவெதுப்பான தண்ணீர், புளிப்பான கருந்திராட்சை பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்துவது, வாயுவின் சீரான செயல்பாட்டுக்கு அனுகூலமானதாக இருக்கும்.
தலையில் மூலிகைத் தைலங்களை வெதுவெதுப்பாக நிரப்பி வைக்கும் "சிரோவஸ்தி' எனும் முறையும், ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் தைலம் மற்றும் மூலிகைக் கஷாயமுறைகளும் உங்களைப் போன்ற உபாதை உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளாகும். ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து இந்தச் சிகிச்சைகளைச் செய்து கொள்வது மிகவும் நல்லது.
உள் மருந்துகளாக விதார்யாதி கஷாயம், தசமூலம் கஷாயம், க்ஷீரபலா 101, முஸ்தாதி மர்ம கஷாயம், பிரசாரிண்யாதி கஷாயம், தான் வந்திரம் கஷாயம் போன்றவற்றை பசியின் தன்மைக்கு ஏற்ப, பாலுடனோ, வெந்நீருடனோ சாப்பிடுவது நல்லது. இதற்கும் ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.

Tuesday, November 1, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தீராப் பசிக்கு என்ன காரணம்?
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

என் வயது 21. சைவ, அசைவ உணவுகளை வயிறு முட்டச் சாப்பிட்டாலும் 15 நிமிடங்களில் மீண்டும் பசி எடுத்துவிடுகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுகிறேன். இவ்வளவு சாப்பிட்டும் உடல் மெலிந்து காணப்படுகிறேன். என்னுடைய தீராப் பசிக்கு என்ன காரணம்?
அபுபக்கர், திருச்சி-8
குடிசை வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காற்று வீசாமலிருந்தால் அந்தக் குடிசை மட்டுமே எரியும். கரியிலுள்ள நெருப்பை ஒரு குழலால் ஊதி, தங்க நகையை உருக்கி ஒட்டுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இந்த இரு உதாரணங்களின் மூலம் நாம் அறிந்து கொள்வது, நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதற்கு காற்றின் தேவை மிக அவசியமானது என்பதுதான். இதேபோலவே உங்களுடைய வயிற்றிலும் நடந்து கொண்டிருக்கிறது. பசித்தீயின் அருகில் ஸமான வாயு எனும் ஒரு வாயு செயல்படுகிறது. பசித் தீயைத் தூண்டுகிறது.
சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்புக் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ் நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன.
ஸமான வாயுவின் தூண்டுதலின் மூலம் கொழுந்துவிட்டு எரியும் உங்களுடைய பசித் தீயில் வந்துவிழும் உணவுப் பொருட்கள் அனைத்தும் விரைவாகச் செரிக்கின்றன. ஆனாலும் உடல் ஊட்டமடையவில்லை. உணவின் சத்து உடல் உட்புறப் பகுதிகளில் சேராமல், பெருமலமாகவும், சிறுநீர் வழியாகவும், வியர்வையின் வழியாகவும் வெளியேறத் தொடங்கினால், உடல் ஊட்டம் பெறாமல், மெலிந்தேயிருக்கும். கிணற்றைத் தூர் வாரிவிட்டால், கிணற்றிலுள்ள உறைகளின் இடுக்கிலிருந்து புதிய நீர் ஊறி, புதிய தண்ணீர் நிரம்புவதைப் போல, கெட்டுப் போயுள்ள குடலின் பித்த நீரையும், காற்றையும் நீங்கள் வெளியேற்ற வேண்டும். அதற்கு ஆயுர்வேத லேகிய மருந்தாகிய கல்யாணகுலம் உதவக் கூடும்.
காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சித் தண்ணீர் நன்றாகச் செரித்த பிறகு, மதிய வேளையில் இந்த லேகிய மருந்தை சுமார் 15 - 20 கிராம் நக்கிச் சாப்பிட, தேவையற்ற கெட்டுப் போன பித்த - வாயு நன்றாக நீர்ப்பேதியாகி வெளியேறிவிடும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, இதுபோல சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குச் செய்து கொள்வது மிகவும் நல்லது. புதிய பித்தநீரின் வரவால் உங்களுடைய பசியானது கட்டுக்குள் வந்துவிடும். அதை மதிக்காமல் மீண்டும் நீங்கள் உணவை அதிகமாக ஏற்பது தவறாகும். "தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயளவு இன்றிப் படும்' என்ற வள்ளுவர் பெருமான் கூறியதை நினைவில் நிறுத்திக் கொள்ளவும். தன் ஜீரண சக்தியை மதிக்காமல் அளவுக்கு மீறி அதிகமாக உண்பவனுக்கு நோயும் அளவுக்கு மீறி எல்லையின்றி ஏற்படும் என்ற அவருடைய குறிப்பை மதித்துச் செயல்படவும். காலையிலும் இரவிலும் மித உணவை எளிதில் செரிக்கக்கூடிய வகையில் சாப்பிடவும். மதிய வேளையில் நன்றாகச் சாப்பிடலாம்.
விதார்யாதி கிருதம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை லேசாக உருக்கி, காலை, மாலை சுமார் 15 மி.லி. 41 -48 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ஸமான வாயுவின் சீரான செயல்பாட்டையும், பசித்தீயின் உக்ரத்தைக் குறைத்தும், உடல் தேவைக்கான அளவில் போஷணத்தையும் நிறைவாக நீங்கள் பெறலாம். அப்ரக பஸ்மம் தற்சமயம் கேப்ஸ்யூல் வடிவில் வரத் துவங்கியுள்ளது. உணவிற்கு சுமார் 1/2 - 1 மணி நேரத்துக்கு முன்பாகச் சிறிது வெதுவெதுப்பான பாலுடன் பருக, பித்த வாயுக்களின் சீற்றத்தை அடக்கி, உடலுக்கு நல்ல ஊட்டத்தையும் பெறலாம்.
உணவில் இனிப்புச் சுவையை சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளவும். மாவுச் சத்துள்ள பண்டங்கள், அதன் பிரிவுகளான சர்க்கரைகள், நெய் முதலிய சில கொழுப்புப் பண்டங்கள் இனிப்பு வகையில் அடங்கும். பித்த வாயுவை அடக்குவதில் மற்ற சுவைகளைவிட, இனிப்புச் சுவை சிறந்தது. கண்களின் தெளிவு, கேசங்களின் அடர்த்தி, தசை வலிவு, மேனி நிறம், திசுக்களின் வளர்ச்சியும் அடர்த்தியும், ரஸ - ரக்த தாதுக்கள் தோஷமற்றுத் தெளிந்திருப்பது போன்றவை இனிப்புச் சுவையின் தனிச் சிறப்புச் செயல்களாகும்.
thanks : thina mani kadhir