Saturday, June 30, 2012

வேதாத்திரி மகரிஷி ஐக்கிய நாடுகள் சபை

வேதாத்திரி மகரிஷி ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபையில் வேதாத்திரி மகரிஷி ஆற்றிய உரை
(9 சனவரி, 1975) (ஆங்கில உரையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.)

அன்பான நண்பர்களே,
ஆன்மீக மேம்பாடு பற்றிக் கேட்பது என்ற நல்ல நோக்கத்தோடு இங்கு குழுமியிருக்கும் உங்களனைவரையும் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மீக அறிவு என்பது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், உலக மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதியைப் பராமரிப்பதற்கும், மிக அவசியமான ஒன்றாகும்.
மிகப் பெரிய நிறுவனமான ஐக்கியநாடுகள் சபை இதற்காகத் தொடங்கப்பட்டது. மனிதகுலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஐ.நா. சபை இயங்கி வருகின்றது. அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமைதியைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை மிகக் கடினமாக உழைக்கின்றது.

எல்லா நாட்டுப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து உலக அமைதியைப் பற்றி எண்ணுவதற்கான ஒரு நல்ல திட்டமே ஐக்கிய நாடுகள் சபை. ஆபத்தான அணு ஆயுதங்களுக்கு எதிராக மனித இனம் உயிர் வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை உலக சமாதானமாகும்.
தத்துவ ஞானத்தில் சிறந்தவர்களும், உலகளாவிய எண்ணங்களில் சிறந்த அறிஞர்களும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் நற்பணிகளைப் பாராட்டுகிறார்கள்.

ஆன்மீக அறிவு மேம்பாடு
இங்கே, நான் உலக அமைதிக்கு மிக முக்கியமான மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. அது மனித இனம் ஆன்மீக அறிவில் மேம்பாடு அடைவதாகும்.
உண்மையிலேயே, அமைதியான வாழ்க்கைக்குப் பொருளாதார வசதிகள் அவசியமானவை. ஆனால் ஆன்மீக அறிவு இல்லாமல், பொருள் வசதிகள் மட்டும் வாழ்க்கையில் திருப்தியையும், அமைதியையும் கொண்டு வர முடியாது. இங்கு ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.

உணவு, உறைவிடம், உடை ஆகியவை உலகியல் வாழ்வில் அவசியமான பொருட்கள். உலகையும் இம்மூன்று அவசியமான பொருட்களின் சேமிப்பையும் அகக்காட்சியாகப் பாருங்கள்.
துணிகள் உற்பத்தியை உலகம் இன்று உடனடியாக நிறுத்தி விட்டாலும் இப்போது நாம் உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ள துணிகள் எல்லா மக்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக உள்ளன. இதுபோல், சேமித்து வைத்துள்ள உணவு ஓராண்டிக்குப் போதுமானதாக உள்ளது. உறைவிடமும் ஒருவருக்குத் தேவையான பரப்பளவிற்கு எடுத்துக் கொண்டால், யாருக்கும் உலகில் வீடு இல்லை என்று தவிக்க வேண்டியதில்லை.
சில மனிதர்களிடமும் சில நாடுகளிலும் இந்த வசதிகள் குறைவாக இருக்கலாம். மற்ற மனிதர்களிடமும் நாடுகளிடமும் இவை உபரியாக உள்ளன.

ஆன்மீக அறிவின் மேம்பாடுதான் இவ்வாழ்க்கைத் தேவைகளை உலக மக்களுக்கு அன்பு, மதிப்பு, பொறுப்பு இவற்றுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது.
ஆன்மீக வளர்ச்சியினால் ஒரு மனிதனிடம் இயற்கையாக மலர்கின்ற அன்பு மற்ற மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது. அன்பு மற்றவரது தேவைகளையும் ஆசைகளையும் மதிக்கின்றது. திருப்திகரமான வாழ்க்கைக்கு, மற்றவர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அன்பு உதவுகிறது. ஒருவரது அன்பு தனது சொந்த உடலுழைப்பையும், பொருளாதார வசதியையும், அறிவாற்றலையும் மற்றவர்களுக்குத் தந்து, தியாக உணர்வுடன் விரும்பி வாழ உதவுகிறது.
அரசியல், பொருளாதார வழிகளில் ஒருவரது வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்த முயற்சிகள் எடுப்பதோடு, மனித சமுதாயத்தில் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட ஒரு வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில், தகுதியுடைய மக்கள் அனைவரும் ஆன்மீக அறிவில் குறிப்பிட்ட காலத்தில் மேம்பாடு அடைவர்.

ஆன்மீக மேம்பாடு என்றால் என்ன? என்பதைக் கவனிப்போம். வாழ்கின்ற முறையில் மனம்தான் மையப் பொருளாக உள்ளது. சிறப்பான இயக்கமாக உள்ளது. ஒருவன் மனதின் மதிப்பையும், அதன் அற்புதமான செயலையும் புரிந்து கொள்ளும்போது, அவனால் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

உயிரும் மனமும்
உயிரின் படர்க்கை நிலையே மனம் என்பதால், முதலில் உயிரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம். ஏனெனில், உயிர்தான் மனதிற்கு அடிப்படை. உயிரும் மனமும் மனிதனின் அறிவாட்சித் தரத்தில் (ஆளுமைத்திறனில்) இரகசியமான அம்சங்கள். ஐம்புலன்கள் மூலம் பெறும் அறிவைக் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

ஓர் ஒழுங்குமுறையான மனப்பயிற்சியின் மூலம்தான் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். மனம் அதனுடைய மூலத்தைத் தேடுவதும், உயிர், மனம் இவ்விரண்டின் இருப்பையும், அவற்றின் இயக்கத்தையும், இவை ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பையும் புரிந்து கொள்ள மனப்பயிற்சி உதவுகிறது. இத்தகைய மனப்பயிற்சிதான் ‘தவம்’ அல்லது ‘எளியமுறை குண்டலினி யோகம்’ எனப்படுகிறது.

குண்டலினி என்ற பெயர் இறையாற்றலைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஆற்றல்களுக்கும் அடிப்படையான உயர்ந்த பேராற்றல். உயிரினங்களிலுள்ள உயிராற்றல் இறைநிலையின் பேராற்றலின் ஒரு பகுதிதான். இறைநிலையின் பேராற்றல்தான் பிரபஞ்சத்தின் இயக்கங்களை வழி நடத்துகிறது. உண்மையிலேயே அடிப்படையான விண்துகள்களின் தொகுப்புதான் வெவ்வேறு திணிவுகளுடன் விளங்கும்போது தோற்றப் பொருட்களாக அமைகின்றன.
எனவே, விண்துகள் (அல்லது உயிர்த்துகள்) தான் பௌதிகத் தோற்றப் பொருட்கள் உற்பத்திற்கு அடிப்படையான தத்தவமாகவும், மனம் மன இயக்கத்திற்கு அடிப்படையானதாகவும் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்துகள், அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவற்றை அறிந்து உணர்ந்து கொள்ளுதலே ‘ஆன்மீக அறிவு’ எனப்படும். இந்த அறிவுதான் எல்லா விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானம் ஆகும். பொருளாதார அறிவோடு மட்டும் வாழுதல் என்பது மனதிற்கு ஒருபுறம் பாரமாக இருக்கும். அதைச் சரிசமன் செய்வதற்கு ஆன்மீக அறிவு கட்டாயம் தேவை.

உயிரை உணர்தல்
நமக்குள் உயிராற்றலாக இயங்குகின்ற உயிரை எப்படி உணர்ந்து கொள்வது? உயிர்த்துகள் உடல் முழுவதும் ஊடுருவிச் சென்றாலும் பரு உடலின் நடுப்பகுதியில் ஓர் இயக்க மையம் உயிருக்கு அமைகின்றது. பொதுவாக, உயிரின் இயக்க மையம் என்பது முதுகுத்தண்டின் அடியில் அமைந்து உள்ளது. இதை ‘மூலாதாரம்’ என்று முந்தைய யோகியர்கள் அழைக்கின்றனர்.
இந்த உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைச் சக்கரம் என்ற புருவ மத்திக்கு மாற்றி அமைத்தாலன்றி, உயிரின் இருப்பையும் இயக்க நிலையையும் மனதால் உணர முடியாது.

முற்கால யோகிகள் மூச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும் இந்த உயிர் மையத்தை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால், இவ்விரண்டு முறைகளும் கடினமானவை. அதிகக் காலம் எடுத்துக் கொள்பவை. சக்தியை மேலே கொண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும்.
இதற்கிடையில் இந்த ஆற்றலை மேலே கொண்டு வரும்போது, வழியில் தடை ஏற்பட்டால், உயிருணர்வு பெறுபவர் சில தீய விளைவுக்கான பயன்களை அனுபவிக்க நேரிடும். எனவே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டோர் இந்த யோகத்தின் நன்மைகளை உணர முடியாமல் போயிற்று.

குருவானவர் குண்டலினி சக்தியின் இயக்க மையத்தை மாற்றி, நிலை நிறுத்தியவுடன் கற்பவர் உயிர்ச்சக்தியின் அழுத்தத்தைப் புருவமத்தியில் மனதால் கவனிக்க வேண்டும். இந்த வழிமுறையே ‘தவம்’ எனப்படும். உயிராற்றலை மனதால் கவனிக்கும்போது மனதின் விழிப்புநிலை முன்னேற்றம் அடைகிறது. உயிராற்றல் வீணாகச் செலவாவதைச் சேமிக்கிறது. மனதில் உறுதியையும் அமைதியையும் அதிகப்படுத்துகிறது.
மனம் அதன் அடிப்படையான உயிரைக் கவனிக்கின்றபோது உயிரும் மனமும் இருப்பதையும் இயங்குவதையும் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பையும் செய்முறை பயிற்சியின் அனுபவத்தால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தவத்தில் தெளிவாக இறைநிலையை உணர்ந்த குருவின் மூலம் ஆன்மீக சாதனை கற்பவரின் உயிராற்றலை, குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஆக்கினை மையத்திற்குக் கொண்டு வந்து, நிலை நிறுத்தி, உணர வைப்பது ‘தீட்சை’ எனப்படும். இது ஆன்மீக சாதனைப் பயிற்சியில் முதல்படி. மேலும் சில பயிற்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் கற்றுப் பழக வேண்டும்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்களான (World Community Service Center WCSC) நாங்கள் இந்தக் குண்டலினி தவத்தை ‘எளியமுறைக் குண்டலினி யோகம்’ (Simplified Kundalini Yoga SKY) என்று அழைக்கிறோம்.

www.vethathiri.edu.in
http://en.wikipedia.org/wiki/vethathiri_maharishi
www.facebook.com/groups/vethathiriyam
www.facebook.com/groups/vazhgavalamudan
www.facebook.com/vethathiriyam
www.facebook.com/vethathiriyoga
www.youtube.com/vinborntowin

எளியமுறைக் குண்டலினி யோகம் (SKY)
இது நான்கு பயிற்சி முறைகளை உள்ளடக்கியது. அவை:
1) அகத்தவம் (Meditation) 2) அகத்தாய்வு (Introspection)
3) குணநலப்பேறு (Sublimation) 4) முழுமைப்பேறு (Perfection)

அகத்தவம் மன உறுதியையும் மன அமைதியையும் பெருக்குகிறது.
அகத்தாய்வு அறிவு ஒளி வீசச் செய்கிறது. ஒருவரது வாழ்க்கையில் ஒளி விளக்காக வழி காட்டுகிறது.
குணநலப்பேறு ஒருவரது பழக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி, நல்ல குணங்களை உண்டாக்குகின்றது.
முழுமைப்பேறு என்பது ஆன்மீக மேம்பாட்டில் சிறப்பாகக் கிடைத்த கனி.

இந்த எளியமுறைக் குண்டலினியோகம் முழுவதையும் பத்து (10) வகுப்புகளில் (வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என்ற முறையில்) கற்றுக் கொள்ள முடியும்.

அன்புள்ள நண்பர்களே,
மனிதன் பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற விநோதமான உயிரினம். ஒழுங்கான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொண்ட பின்னர்தான், மனிதன் முழுமைப்பேறு என்ற இலட்சியத்தை அடைய முடியும்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கமே ஆன்மீக அறிவை எல்லா நாட்டு மக்களுக்கும் பரப்புவது ஆகும். என்னுடைய வாழ்வில் நாற்பது (40) ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு ஆன்மீக அறிவு மட்டுமே தனிமனிதனிடத்திலும் சமுதாயத்திலும் நாடுகளுக்கிடையேயும் அமைதியை விளைவிக்கும் என்பதை நான் கண்டு கொண்டேன். ஆன்மீக மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பான, முழுமையான முறையை நான் வழிவகுத்தேன். அதைத் தகுதியான மனிதர்களுக்குப் போதித்து வருகிறேன்.

அற்புதமான உளப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்ற எந்த நண்பருக்கும் என்னுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இச்சொற்களோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நீங்களனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், அமைதி பெற்று, ஓங்கி வாழ்க வளமுடன்” என வாழ்த்துகிறேன்.

சேர்த்துக்கொள்கிறீர்களா? இதைப்படிங்க!

உணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா? இதைப்படிங்க!

உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதயநோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

காபி, டீ, பால் போன்றவைகளில் சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு
நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட்
மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத்தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சர்க்கரையே காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Friday, June 29, 2012

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்

முதுகுவலி வராமல் தடுக்க டிப்ஸ்

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

எடை குறைய 7 நாட்கள்

எடை குறைய 7 நாட்கள்

பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல், அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம். அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது. இதனை அமெரிக்க விவசாய துறையும், உணவு மற்றும் மருத்து நிர்வாக துறையும் பல ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரித்தன. இன்று உலகம் முழுவதும் இமந்த திட்டம் பரவி வருகிறது.
இந்த திட்டத்தின் படி ஒரு வாரத்தில் 10 முதல் 17 பவுண்ட் எடை குறையும். உற்சாகம் பொங்கி வழியும். எப்பபோது வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது. உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். பாரமில்லாத‌ உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள். இதை அனுபவித்தவர்கள்.

இந்த ஏழூ நாட்கள் உணவு திட்டத்தை கடைபிடிக்கும் போதுதினமும் 10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது பழக்கம், புகை பிடித்தல், போன்றவற்றை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை தரும்.

முதல் நாள்: எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும். வாழைப்பழ‌த்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ச‌க்திகளையும் வழங்கும்.

இரண்டாம் நாள் : காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில் காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும் கொடுக்கும்.

மூன்றாவது நாள் : பழங்களையும் காய்கறி கலந்து எடுத்து கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம் கட்டாயம் கூடாது. அதே போல் உருழைக்கிழ‌ங்கும் வேண்டாம். ஏனென்றால் பழங்களில் இருந்து காபோஹைதறேட் கிடைத்து விடும். உடலின் எடை குறையத் தொடங்கும். தேவையில்லாத அதிக கொழுப்பு கரைக்கப்படும்.

நான்காம் நாள் : வாழைப்பழங்களையும் பாலையும் சாப்பிடலாம் இந்த நாளில் 8 வாழைப்பழங்களையும் 3 தம்ள்ர் பாலையும் அருந்த வேண்டும். ஏதாவது ஒரு சூப்பையும் அருந்தலாம். சிலரால் 8 வாழைப்பழ‌ங்களையும் சாப்பிட முடியாது . முதல் 3 நாளில் இழந்த பொட்டசியம், சோடியம் சுத்தமாக இருக்காது இந்த நாளில் தன் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சுகமான அனுபவமாக உணர‌ முடியும்

ஐந்தாம் நாள்: இன்றைய நாள் விருந்து நாள் இறைச்சி தக்காளியை சேர்த்து கொள்ளலாம் இறைச்சி 20 அவுன்ஸ் , 6 தக்காளிப் பழ‌ங்கள் இறைச்சியோடு சேர்த்து சாப்பிடலாம். தன்னெரை கூடுதலாக 2 தம்ள்ர் அதாவது மொத்தமாக‌ 12 தம்ள்ர் குடிக்க வேண்டும் . இது வயிற்றில் தோன்றும். அமிலத்தை ஈடுகட்டும். இறைச்சியில் இரும்பு புரொட்டின் உள்ளன. அதிகமான தண்ணீர் குடிக்க ரத்த ஒட்டம் ஜீரண உறுப்புகள் சுத்தமாக்கப்படுகின்ற‌ன.

ஆறாம் நாள் : இறைச்சி, காய் கறிகளை வயிற்றின் மொத்த கொள்ளல‌வுக்கு சாப்பிடலாம். இதிலிருந்து இரும்பு , புரொட்டடீன்,வைட்டமின் நார்ச்சத்து கிடைக்கும். எடை குறையும் உடல் மாற்றத்தை உண‌ர முடியும்.

ஏழாம் நாள் : சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர் மட்டும் 7 நாட்களும் மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல் காற்றுப் போல் லேசாகத் தெரியும்

முயன்று பாருங்கள் ஓரே வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை உடல் குறையும்

அறிவை வளர்க்க எளிய வழிகள்...

அறிவை வளர்க்க எளிய வழிகள்...

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்....

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.
இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

எதற்காக எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம்?

எதற்காக எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம்?

விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லாநாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

இதயத் தூய்மையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நமது முதாதையர் கடைபிடித்திருந்தனர். நம்நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.

அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பதை நம்முன்னோர்கள் ஒரு சுகமாகக் கருதியிருந்தனர்.

ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை.

உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பெறும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன.

முதலாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் எண்ணெய் பூசியதும் வாயு கிடைப்பெறாமல் மாண்டு போகின்றன.

விரத நாட்களில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?

விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதாக கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை கொண்டாடுவது வெறும் மூட நம்பிக்கை என்று கூறி வந்தனர்.

ஆனால், இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிப்பட்டுள்ளது.சனி கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாகக் கருதிவரும் எண்ணெய் தலைக்குச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாக்குகின்றது. இவ்வளையம் இருப்பதால் கிரகங்களினின்று வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது.

விரத நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம். இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது நம் முன்னோர்களின் மூட நம்பிக்கை நன்மைக்குத்தான் என்று ஏற்றுக் கொள்கிறிர்கள் அல்லவா?

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்!!!

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்!!!

உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.

சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...

1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.

2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.

3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.

4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...

1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.

3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.

4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்

பலா

“இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட அழகிய கண்கள் வேறு எங்கோ நோக்கின. இருளப்பன் அந்த பணத்தை வாங்காமல் கைகளைப் பின்னுக்கு இழுத்து கொண்டு பிகு செய்தான்.

அவன் அப்பனுக்கு துணையாக பலா கன்றுகளுக்குக் குழி தோண்டினன். குழிகளில் எருவிட்ட பின்பு நட்டு நீர் ஊற்றினான். அப்பனுடன் இருந்து நாள் முழுவதும் இவ்வாறு செய்தான். அப்பன், தாத்தா காலத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த பலா, முந்திரி தோப்புகளில் ஆண்டைக்கு நல்ல வருமானம் கிடைந்தது. அதில் சேர்ந்த பணத்தில் அரைகாணி நிலம் வாங்கி, பலா மரங்கன்றுகளை நட்டுக் கொண்டு இருக்கிறார்.

“கூலி பத்தவில்லையாடா... நீ சின்ன பையன் தானே உங்க அப்பனுக்கு தர்ற கூலியே உனக்கு வேணுமாக்கும்” என்று கிண்டல் பேசினார்.

“இல்ல.... பலா கன்னு வேணும்...” இருளப்பன் இழுத்தான்.

“உங்கப்பன் எதாச்சும் தோப்பு வாங்கி இருக்கானாடா” என்று கிண்டல் அடித்தவாறு இரண்டு பலா கன்றுகளைத் தந்தார்.

மகிழ்ச்சியில் இருளன் அந்தச் செடிகளைக் குழந்தையாய் நினைத்து வருடினான். பலா கன்றுகள் தாயாய் பால் சொறிந்தன. அதனால் அவன் கைகளை பிசுபிசுப்பாக்கியது. பல நாட்கள் அல்ல… பல ஆண்டுகள் இருளன் கனவு இன்று நிறைவேறி உள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவைத்த அந்த பலா சுளையின் இனிப்பு இன்றும் தொண்டைக் குழியில் இனித்துக் கொண்டு இருக்கின்றது.
அவனது அப்பா பலா பழச்சுளைக் கூறு ஒன்றை வாங்கி, தம்பி, தங்கைகளுக்கு இரண்டிரண்டு தந்தார். மூத்தவனான இவனுக்கு ஒரே ஒன்றைத் தந்தார்.. அந்த பலாச் சுளையின் திகட்டும் இனிப்பு அவனது ஆசையை கொழுந்து மேலும் விட்டு எரிய செய்தது. சின்னப் பையன் தானே! அப்பாவிடம் இன்னொன்று சுளை வாங்கி தரும்படி அழுதான். அடம் பிடித்தான். தம்பி, தங்கைகளிடம் பங்கு கேட்டுச் சண்டை போட்டான். அப்பாவிடம் இருந்து அடிதான் கிடைத்தது. பலாச் சுளை கிடைக்கவில்லை.

அந்த சிறுவனின் நிறைவேறாத ஆசை அவனுடன் சேர்ந்து வளர்ந்து பெரியதானது. படிப்பை குடும்பத்தின் ஏழ்மையால் பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் தொடர முடியாமல் போனது. தனது தந்தையுடன் கூலி வேலைக்கு போக தொடங்கினான். அவனது முதல் உழைப்பிற்கு, உழைப்பின் கூலிக்கு கிடைத்தது தான் இந்த பலா கன்றுகள்! அவனே தன் கரங்களால் உழைத்து சம்பாரித்தது.

தலித் இயக்கம் ஒன்று பொறம்போக்கு நிலத்தை மடக்க முயன்ற பொழுது இருளப்பனின் தந்தையும் அதில் பங்கு கொண்டார். அதனால் அந்த குடும்பம் சொந்தமாய் குடியிருக்க ஒரு சின்ன குடிசைக்கான இடம் கிடைத்து இருந்தது.

குடிசையின் முன்புறம் காவல் தெய்வங்களாக அந்த பலா கன்னுகளை நட்டான். வீட்டு அருகில் அங்காங்கே கிடைக்கும் காய்ந்த மாட்டு சாணத்தை பொறுக்கி வந்து எருவாக இட்டான். தங்கச்சி பாப்பாவை கவனத்துடன் பேணியது போன்று பலா கன்னுகளையும் பராமரித்தான். அவை துளிர் விட்டு தளிர்த்து வளர்ந்தன. தழைந்த ஒவ்வொரு பசும் இலையும், உதிரும் ஒவ்வொரு பழுப்பு இலையும், வளர்ந்த ஒவ்வொரு இணுக்கு தண்டும் அங்குலம் அங்குலமாய் இருளப்பன் நினைவில் பதிந்து கிடந்தன.

அனைவரும் வேலைக்கு சென்றிருந்த ஒரு நாளில் வெள்ளாடுகள் சிலது தழைந்து வளர்ந்திருந்த அந்தப் பலா செடிகளை மேய்ந்து தும்சம் செய்து விட்டன. ஒரு செடியை முற்றிலும் மேய்ந்து புடுங்கி எறிந்து விட்டன. இன்னொன்று இலைகள் இல்லாமல் மெட்டையாய் கிடந்தன. இருளப்பன் பலா கன்னுகளுக்கு நேர்ந்த கதியை கண்டு கதறி அழுத்தான். கண்ணீர் விட்டான். மொட்டையாய் நின்றச் செடியின் காயங்களில் பசும் சாணியை மருந்தாய் தடவினான். வேலிகாத்தன் முட்களான வேலியை பலாவைச் சுற்றி அமைத்து கண்ணின் இமையாய்ப் அதைப் பாதுகாத்தான்.

“எத்தினி பலா பழங்க இருக்குப்பா நம்ம மரத்தில்” என்று இருளப்பனிடம் குட்டி பெண் கேட்டாள். அவன் பலாமரத்தில் தொங்கி கொண்டிருந்த காய்களை எண்ணத் தொங்கினான். அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் முழுவதும் பலா மரத்தை சுற்றியோ அல்லது பலா பழங்களை பற்றிய அவனது மகளின் குழந்தைத்தனமான கேள்விகளுடனேயே கழிந்தன.

ஒரு நாள் சமையல் கறிக் கூட்டிற்கு பலாப் பிஞ்சை அறுக்க முனைந்த அவனுடைய மனைவிக்கும் அவனுக்கும் ஒரு யுத்தமே நடந்து முடிந்தது!

அவனது தீராத ஏக்கமும், குட்டி பெண்ணின் ஒயாத கேள்விகளும் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைப்பு கூட பலா பழமாக இனித்தது. சிறுவயதில் அவனுக்கு வந்த ஏமாற்றம் தனது குழந்தைக்கு வரக் கூடாது என்று சிந்தனையில் அவனின் பத்தாண்டுகள் உழைப்பு தோன்றி மறைந்தது!

வழக்கமாய் ஒவ்வொரு ஆண்டும் வரும் புயல்தான் என்ற நினைப்பில் கட்டிட வேலைக்கு இருளப்பன் சென்றேன். “தானே” புழல் அப்படியானது இல்லை!

அசாதாரணமான அமைதியும், கொந்தளிப்பும் மாறிமாறி சுற்றுபுற சூழ்நிலையில் தென்பட்டது நல்லதற்கு இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. காற்று வீச தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் அதிகரித்தன. வேகம் அதிகரிப்பது அதற்கு பிறகு எங்கும் நிற்கவே இல்லை. சூறாவளி ஒரு திசையிலிருந்து மட்டுமல்ல எல்லா திசைகளிலிருந்து வீசியது அதிசயமாக இருந்தது. காற்று சுழன்று சுழன்று அடித்தது. அந்த சுழல் வேகத்தில் ஆடைகள் தாறுமாறய் கிழிந்தது. நூறு ஆட்கள் கையை பிடித்து தரதரவென்று இழுப்பது போன்று ஒரு பக்கமாய் ஆளை நெட்டித் தள்ளி காற்று இழுத்து சென்றது. நூற்றாண்டு வாழ்ந்த பெரும் மரங்கள் வேரோடு பூமியை பிளந்தும் முறிந்தும் சாய்ந்தது பரிதாபமாய் இருந்தன. மின்கம்பிகள் முறுக்கி கொண்டு சடசடவென்று தீப்பொறிகள் சிதறி கொடியாய் பரவி டிரன்னபார்மர்கள் வெடித்து சிதறியன. சிங்களப் படைகள் ஈழத்தமிழ்ர் நகரில் வன்மத்துடன் நுழைந்து நிகழ்த்திய போர் கால அழிவுகளை தானே புயல் சில மணி நேரங்களில் நிகழ்த்தியது. உயிர் சேதாரங்கள் மட்டும் குறைவு என்று கூறலாம். குடிசையின் கூரைகள் பியத்து கொண்டு ஆகாயத்தில் பறந்தன. பேய்க் காற்று கடலில் உப்பு நீரை வாரிச் சுருட்டி நிலமெங்கும் கொட்டித் தீர்த்தது.

புயலின் வெகமும் கோரத்தாண்டவமும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பது முடிவே இல்லாமல் தொடர்ந்தன. அதை எவ்வாறு விவரிப்பது என்பது புரியவில்லை. அதற்கு மொழியின் சொற்கள் போதாமையை உணர்கிறேன். மொழியைத் தாண்டி உங்கள் மனக்கண்களால் பார்த்தால், மனதால் உணர்ந்தால் மட்டுமே இந்த புயல் வேகத்தை, வீச்சை, கோரத்தாண்டவத்தைப் புரிந்து கொள்ள இயலும்!

இருளப்பன் அலங்கோலாமாய் வீட்டை அடைந்தான். அந்த குடிசைப் பகுதி முழுவதும் புயலினால் சின்னா பின்னாமாக்கப்பட்டு கிடந்தது. குடிசைகளின் கூரைகள் தெருவில் கிடந்தன. குடிசையின் சுவர்கள் குடடிச்சுவர்களாய் சிதலமடைந்து கிடந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே குஞ்சும் குலுவானமாய் கிடந்த பலா மரம் வேரொடு சாய்ந்தது விழுந்தது. விழுந்த வேகத்தில் பலா பிஞ்சுகள் பிய்ந்து சேற்றில் சிதறின. அவன் குந்துகாலிட்டு அந்த மழையிலும் பலாமரத்தின் வேரில் அமர்ந்து குலுங்கி அழுதான். அந்த மரமும் நிச்சயம் அழுது இருக்கும். அவனின் பதினாறு ஆண்டுகள் கனவும் கண்ணீரும் புயல் மழையில் கரைந்தது யாருக்கும் தெரியவில்லை.
உப்பு நீர் பட்டதால் மிஞ்சி இருந்த மரங்கள், செடிகள் பசுமை இழந்து கறுத்து வதங்கி தொங்கி கொண்டிருந்தன.

வீழ்ந்து கிடந்த மரத்தின் பலாப் பிஞ்சுகளைப் பறிந்து குட்டிச் சுவரின் மூலையில் அடிக்கி வைத்தான். ஒரு பிஞ்சை அறுத்து கூட்டு வைக்க கேட்ட மனைவியிடம் சண்டை போட்ட இருளப்பன், இன்று தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் பலா பிஞ்சு கூட்டு பொறியலாக, சில வேளைகளில் அதையே சாப்பாடாகவும் செய்ய சொல்லிச் சாப்பிட்டான்.. குட்டி பெண் தினமும் பலா பிஞ்சுகள் பார்த்து அது எப்பொழுது பழுக்கும் என்று கேட்டாள். முதலில் பொறுமையாக பதில் சொன்னான். அடிக்கடி அவள் இதையே திரும்ப திரும்ப கேட்டாள். சில நாட்களில் இருபது முப்பது தடவைகள் அந்த கேள்விகளை விதவிதமாகக் கேட்டாள். அவனுக்கு அமுகையும் ஆத்திரமும் வந்தது.

“சனியனே! உன்னால் தாண்டி எல்லாம் போச்சு அதை தொட்டு தொட்டு ஆசைப்பட்டு வீக்கினியே” என்று குழந்தை மீது எரிந்து விழுந்தான்.

பலாப் பிஞ்சுகளை கூடையில் வைத்து சந்தையில் கொண்டு போய் விற்க முனைந்தான். அங்கு தலை சுமையாகவும், வண்டி வண்டியாயாகவும் பலா பிஞ்சுகள் சந்தையில் வந்து இறங்கின. சீந்துவாறின்றி நாறிக் கிடந்தன. அடிமாட்டு விலைக்கு சுமை கூலியாவது கிடைக்கட்டும் என்று மொத்த வியாபாரியிடம் விற்று விட்டு அவன் வந்தான்.

சென்னை அரசும், டில்லி அரசும் நிபுணர் குழுக்களை அனுப்பி புயலின் சேதங்களை ஆய்ந்து கொண்டிருந்தன. பஞ்சாய்த்து, வட்டம், மாவட்டம் என அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளாய் பறந்து புயல் நிவராணப்பணிகளில் கலக்கி கொண்டிருந்தனர். கலக்கியதிலிருந்து பொறுக்கியும், வாரியும் தின்று கொண்டிருந்தனர். இருளப்பனிடம் நூறு ரூபாய் வாங்கி கொண்டு புயல் நிவராணத் தாளை பூர்த்தி செய்து கொண்டு போனார்கள். நிவாரணத் தொகை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர்.

சொற்ப தொகையை முன்சீப்பிடம் வாங்கிய இருளப்பன், “சார். .” என்று இழுத்தான்.

“பலாமரம் ஒன்னு வீழ்ந்துட்டதய்யா… அதற்கு ஏதாவது கொடுங்கய்யா.”

அப்பொழுது அந்த கிராம முன்சீப் பார்த்த அலட்சிய பார்வையில் ஒட்டு மொத்த இந்திய நாட்டின் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் தெரிந்தார்கள். கைகொட்டி கேலிசெய்வது மாதிரி அவனுக்கு தோன்றியது.

“அவரை போயி பாருங்க…..” என்று ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரைக் கை காட்டினார். நிவாரணத் தொகை வாங்குபவர் அனைவரிடமும் ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலை அவர் செய்து கொண்டு இருந்தார்.

அவரிடம் ஆயிரம் ரூபாய் தத்தம் கொடுத்து விட்டு “பலா மரம் ஒன்னு...” என்று இருளப்பன் தலையை சொறிந்தான்.

“ஒரு மரத்துக்க நிவராண கேட்கிற.. ய்ய்ய்……ய்ய்ய்ய்ய்…….அது பாரு உங்க ஆண்டை ... தனது தோப்பில் ஆயிரம் மரங்கள் போயிருச்சாம்... நிவராண கேட்டு நாயாய் பேயாய் அலையராரு… அவருக்கே ஒன்னும் கிடைக்கல்ல...” என்று நக்கலாக சிரித்தான் அந்த அரசியல்வாதி! அந்த சம்சாரி நிவராணம் கேட்டு நொந்து நூலாகி இருந்ததை அவர் இருந்த கோலம் காட்டிக் கொடுத்தது.

மனக்கசப்புடன் இந்த சுண்டைக்காய் பணத்தில் குடிசையை மீண்டும் கட்டுவது எப்படி என்று சிந்தனையுடன் வீட்டை அடைந்தான். அவனது மகள் சிறிய பலா கன்னை பழைய மரம் இருந்த இடத்தில் நட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.

அவனது கவலை அனைத்தும் அந்த கணம் மறந்து போனது. அளவற்ற ஆனந்தத்துடன் குட்டி பெண்னை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவள் கைகளிலும், கன்னத்திலும் ஒட்டி இருந்த மண்ணில் புயலில் வீழ்ந்து போன அந்த பலா மரத்தின் தீச்சுவை பால் வாசனை கமகமவென்று மணந்து கிடந்தது!

Friday, June 22, 2012

தேங்காய் - மருத்துவ குணங்கள்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

தேங்காய் பால்: தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது.

உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.தேங்காய் சூடு ஏற்படுத்தி சாபிட்டால் தான் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் . அதுவே சூடு பண்ணாமல் சாப்பிட்டால் கொழுப்பு சத்தே கிடையாது.

Thursday, June 21, 2012

ஆன்மிக சிந்தனைகள் »வேதாத்ரி மகரிஷி

ஆன்மிக சிந்தனைகள் »வேதாத்ரி மகரிஷி

தேவைகளை குறைப்போம்

* மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகப்பயிற்சியை முறையாக மேற் கொள்பவனுக்கு ஞானம் உண்டாகும்.

* நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் மட்டுமே மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்.

* வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

* தவறான எண்ணங்கள் மனதில் உருவாகும் போது தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல எண்ணங்களை நாமே வலிந்து சிந்திக்க வேண்டும். அதன் போக்கில் மனதை போக விட்டால் தறி கெட்டு ஓடத் துவங்கி விடும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகங்களில் நாட்டம் வந்து விடும். அதற்காக பழிபாவம் செய்யவேண்டி வந்துவிடும். பிறவிச்சுழலிருந்து என்றுமே தப்பமுடியாமல் போய்விடும்.

இயற்கை

வேதாத்திரிய சிந்தனைகள் : - " இயற்கை "

இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்
எண்ணும் இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்
இயற்கையினை ஈசன், உலகம், உயிர்கள்
எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்
இயற்க்கையின் உச்ச நிலையாக உள்ள
எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆராய்ந்தால்
இயற்கை அறிவு இரண்டும் ஒன்றாய்க் காணும்
இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்.-மகரிஷி

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்துமே
இறைநிலையின் தன்மாற்றமே. இவை அனைத்துமே
இயற்கை என அழைக்கப்படுகிறது. இயற்கையின் மூலம்
சுத்தவேளிஎனும் இறைநிலையே. இயற்கையை இரசிப்பது,
நினைத்துப் பார்ப்பதும் அறிவாக விளங்கும் இறைநிலையே.
இயற்கையின் இறுதித் தன்மாற்றமாகிய மனித மனத்தைக்
கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இயற்கை, அறிவு
இரண்டும் ஒன்றே என்று தெளிவாகப் புலனாகும்.
இந்நிலையே தன்னையறிதல் எனும் சுய ஆராய்ச்சியாகும்.
பார்ப்பது, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் அனைத்தும்
ஒன்றே. அனைத்தும் இயற்கை எனும் இறைநிலையின்
எழ்ச்சி நிலையே ஆகும். வாழ்க வளமுடன்.

Tuesday, June 19, 2012

வேதாத்திரி மகரிஷி!

வேதாத்திரி மகரிஷி!

கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.

Saturday, June 16, 2012

மனச்சோர்வை குறைக்கும் ஆறு உணவுகள்!!!

மனச்சோர்வை குறைக்கும் ஆறு உணவுகள்!!!

எல்லாரும் இப்போதெல்லாம் ஐஸ்கிரீம், சிப்ஸ், பிஸ்கட், ஃபாஸ்ட் புட்-ன்னு அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதுவும் இதை வேலை செய்பவர்கள் அதிகம் உண்பதால் அவர்களுக்கு பசியானது அடிக்கடி சீக்கிரமாக ஏற்படுகிறது. அப்போது அவர்களால் வேலையை சரியாக செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்று விஞ்ஞானப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேலும் ஒரு சில உணவுகளை உண்டால் மனச்சோர்வு ஏற்படாது என்றும் கூறி அந்த உணவுகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

1. பாதாம் பருப்பு - அதில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

2. கடல் உணவு - கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதோடு, சற்று புத்துணர்ச்சியோடும் இருக்கும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

3. பால் - மனச்சோர்வோடு இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருளான தயிரை உணவில் அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக இருப்பதோடு, தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

4. சிக்கன் - இதுவரை நாம் சிக்கன் உண்பதால் நலம் என்று யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இப்போது சிக்கன் பிடித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, சிக்கனில் அதிகமாக புரோட்டீன், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் இருப்பதால், இது மனதை அமைதிப்படுத்தி, ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது.

5. கார்போஹைட்ரேட் - எடை குறைய வேண்டுமென்று உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கார்போஹைட்ரேட் உள்ள உணவு எடையை அதிகரிக்கும் தான், ஆனால் அதே சமயம் கொஞ்சம் கூட சேர்க்காமல் இருக்க கூடாது. இதனால் மனச்சோர்வு தான் ஏற்படும்.

6. சாக்லேட் - மனச்சோர்வு குறைய சாக்லேட் கூட ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும் போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின் பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

ஆகவே டயட் மேற்கொள்பவர்கள் மேற்சொன்ன அனைத்து உணவுகளையும் மனதில் கொண்டு கடைபிடியுங்கள். இதனால் எடை குறைவதோடு, உடலானது ஆரோக்கியமாகவும், மனச்சோர்வு இல்லாமலும் இருக்கும்.

இளமையைத் தரும் ஆலிவ் ஆயில்!!!

இளமையைத் தரும் ஆலிவ் ஆயில்!!!

வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் முப்பது வயது ஆகிவிட்டால் போதும் கிழவி என்றே பெயர் வைத்து விடுவர். அவ்வாறெல்லாம் தெரியாமல் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா? அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில். இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம். இத்தகைய சிறப்பை உடைய ஆலிவ் ஆயிலை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!

1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

2. மேக்கப் நீக்கப் பயன்படுத்தும் மேக்கப் கிரீமை விட, ஆலிவ் ஆயிலை வைத்து மேக்கப்பை நீக்கலாம். முக்கியமாக கண்களின் அருகே மேக்கப் கிரீமை வைத்து நீக்கும் போது கவனமாக செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து அடிக்கடி செய்வதால் அந்த இடம் நிறம் மாறி காணப்படும். இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க, காட்டனை ஆலிவ் எண்ணெயில் நனைத்து மஸ்காரா, காஜல் போன்றவற்றை நீக்கலாம். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

3. தக்காளி தான் முதலில் வயதான தோற்றத்தை குறைக்கும் சிறந்த பொருளாக இருந்நது. ஏனென்றால் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயதான தோற்றத்தை குறைவாக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ற லைகோபைன் தக்காளியில் அதிகமாக உள்ளது. இந்த தக்காளியை முதலில் முகத்தில் தடவி பின் அதன் மேல் ஆலிவ் ஆயிலை பூசி மசாஜ் செய்து வந்தால், சருமமானது பொலிவோடு இருக்கும்.

4. ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும. மேலும் இதை உதடுகளில் தடவினால், உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக, பிங்க் நிறத்தில் மாறும்.

5. குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

Tuesday, June 12, 2012

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’
by vayal
நாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்' அனுபவம்.



கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.

அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலம் கொல்லிமலை என்பதால், மாவட்ட நிர்வாகம் இதன் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் சொல்கிறார்..

"தமிழக அரசு கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்ய ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்-அமைச்சர் கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற உத்தரவிட்டதின் பேரில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க அடிவார பகுதியில் புதிய சோதனை சாவடி ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகள் மூலம் கொல்லிமலையின் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.

கொல்லிமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.

***

14 நாடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.



வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

***

கொத்துக் கொத்தாய் பலாப்பழம்

கொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

***



நன்றி-தினத்தந்தி

Saturday, June 9, 2012

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்

தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது? அறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.. மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும் உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.

நாம் ஏன் தூங்குகிறோம். இது கேள்வி. தூக்கம் வருவதால் தூங்குகிறோம். இது பதில் பதில் வேடிக்கையாயில்லை..

நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும் தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம், என இரண்டு வகைகள் உள்ளன.

தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.

மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது. இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்..

கண் அசைவுத் தூக்கத்திற்கு வருகையில் விரைவாக மூச்சு விடுதல், மூச்சு விடுவதை அதிகரித்தல் ஆகியன ஒழுங்கின்றி இருக்கும் கண்கள் மேலும் கீழுமாகப் பல்வேறு திசைகளில் அசைவதுடன் இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் ஆகியன அதிகரித்து கைகால்களை அசைக்க முடியாது. இது போன்ற நிலைகளில் கனவுகள் ஏற்படும்.

நாம் தூங்கத் தொடங்கிய 70 முதல் 90 நிமிடத்தில் ஏற்படுவது கண்ணசைவுத் தூக்கம், முதல் கட்டத்திலிருந்து நான்கு கட்டங்கள் வந்தபிறகு கண்ணசைவு தூக்கம் வருவதை ஒரு சுற்றுத் தூக்கம் சுழற்சி என்பார்.

ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச் செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது. காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும். அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.

மது அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வராது.. லேசான தூக்கமே வராது. லேசான தூக்கமே வரும். ஆதலால் அவர்களை விரைவில் எழுப்பி விடலாம். ஒரு முறை கண்ணசைவுத் லேசான தூக்கம் பாதிக்கப்பட்டால் திரும்பவும் ஒரு சுற்றுத் தூக்கம் பாதிக்கும். கண்ணசைவு தூக்கம் முடிந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். தூக்கமானது இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று பொதுவாக கூறவியலாது. தூங்குபவரின் வயதுக்கு ஏற்ப மாறும். பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும்.. கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்..

ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது. வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிளால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம். துக்கம் கெட்டு வண்டி ஒட்டினால் நிச்சயம் விபத்துகள் நேருகின்றன.

கண்களை சாலையில் சாய்ப்பது சிரமமாக இருந்தால் கொட்டாவி வருவதை நிறுத்த முடியாமல் போனால் வண்டி எந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதே தெரியவில்லையெனில் வண்டி ஒட்டக்கூடாது. தூங்காமல் இருந்து வண்டி ஒட்டுவது ஆபத்து..

மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை கவனக்குறைவு ஞாபக மறதி மன உளைச்சல் ஆகியன ஏறபடும். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும்.தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்
இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களால் சரியாக வைத்தியம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகள் எரியவிட்டால் இடையிடையே தூங்க அனுமதித்தால் அடிக்கடி ஷிப்ட் மாற்றினால் இக்குறைப்பாட்டை சரி செய்யலாம். 85 வகையான தூக்க நோய்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் சர்க்கரை நோய் மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். பகல் இரவு ஷிப்ட் மாற்றி வேலை செய்வதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல் மனக்குழப்பம், மன இறுக்கம் இதய பாதிப்பு கல்லீரல் குடல் நோய்கள் ஆகியன ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பிபிஒ கால் சென்டரில் வேலை பார்ப்போர் இனிமையான தூக்கத்தையும் உடல் நலத்தையும் தொலைக்கிறார்கள். தூக்கம் கெடுவதுடன் -முறையற்ற உறவுகள் போதைப் பழக்கம் ஆகியன இதனால் ஏற்படுகின்றன. நல்ல தூக்கத்தை மாத்திரை தராது இடையிடையே விழிப்பதை தவிர்க்க நீண்ட தூக்கம் அவசியம்

Thursday, June 7, 2012

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்

Wednesday, June 6, 2012

9ன் சிறப்பு தெரியுமா?

9ன் சிறப்பு தெரியுமா?

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்

நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது

நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்

நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்

நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்

அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்

நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

நவ குண்டங்கள்:

யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்

நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி

நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான். 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Saturday, June 2, 2012

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை !!!

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை !!!

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

கீரைகளின் பயன்கள்

கீரைகளின் பயன்கள்

விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

அரைக்கீரை:

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.

மணத்தக்காளி:

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.

பசளைக்கீரை:

மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை:

வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.

முளைக்கீரை:

எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

அகத்திக்கீரை:

வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை:

வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.

முருங்கை கீரை

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

By : தமிழ்ச் சமுதாயம்
எந்த நாடு விவசாயத்தை ஆளுகிறதோ... அந்த நாடே இனி உலகை ஆளும்...

Friday, June 1, 2012

மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!

மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!

மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.

குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.
By: தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி